Popular Posts

Friday, 26 April 2013

குழந்தைகளுக்கான இலவச இருதய சிகிச்சை முகாம் -


இராமநாதபுரத்தில் நடை பெற இருக்கும் குழந்தைகளுக்கான இலவச இருதய சிகிச்சை முகாம் - 'ரோட்டரி சங்கத்தினரின்' நல்ல முயற்சி !



இராமநாதபுரத்தில் ரோட்டரி இன்டர் நேஷனல் மாவட்ட (3212)நிர்வாகிகளின் முயற்சியில், சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையினருடன் இணைந்து  நடத்தும் குழந்தைகளுக்கான இலவச இருதய சிகிச்சை முகாம், எதிர் வரும் 28.04.2013 (ஞாயிற்றுக் கிழமை) அன்று செய்யது அம்மாள் மேல் நிலைப் பள்ளியில், காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடை பெற உள்ளது.
இதற்கான விழிப்புணர்வு கையேட்டினை, மாவட்ட கவர்னர். ரோட்டரியன் மேஜர் டோனர். H. ஷாஜஹான் அவர்கள் வெளியிட்டுள்ளார். இது குறித்து தொண்டி கோல்டன்  ரோட்டரி சங்கத்தின் தலைவர். ரோட்டரியன் சேக் மஸ்தான் ராஜா .அவர்கள் மற்றும் வருங்கால தலைவர்ரோட்டரியன்   தியாகராஜன் அவர்கள்செயலாளர்ரோட்டரியன்  ரஜினி அவர்கள் பொருளாளர்ரோட்டரியன்  வீர முத்து அவர்கள்   கூறும் போது "தொண்டி  பகுதியை சேர்ந்த, சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளை, அவர்களின் பெற்றோர்கள் முகாமுக்கு அழைத்து வந்து, இலவச சிகிச்சைகளையும், ஆலோசனைகளையும் பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேம் " என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். 

இந்த முகாமில்  பிறந்த குழந்தை முதல் 16 வயது பருவத்தினர் வரை உள்ள குழந்தைகள் அனைவருக்கும் ECHO CARDIOGRAM என்கிற முறையில் இருதயம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் பரிசோதனை செய்யப்படும் என்றும், முகாமுக்கு வருபவர்கள், தங்கள் குழந்தைகளின் அனைத்து பழைய மருத்துவ ரிப்போர்ட்டுகளையும் கொண்டு வருமாறும் கேட்டுகொண்டனர் 

No comments:

Post a Comment

hai